தங்காலை கடற்பரப்பில் படகு விபத்து – இருவர் மாயம் ; நால்வர் மீட்பு !

89 0

தங்காலை கடற்பரப்பில் படகு விபத்து ஏற்பட்டுள்ளதில் இருவர் காணாமல் போயுள்ளதோடு, நான்கு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை  தெரிவித்துள்ளது.

தங்காலை, பரவி வெல்ல கடற்கரையில் படகு விபத்து ஏற்பட்டபோது அந்த படகில் மொத்தம் ஆறு மீனவர்கள் இருந்துள்ளனர்.

காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, காலி, களுத்துறை மற்றும் ஹிக்கடுவா கடற்பரப்பில் நேற்று மேலும் மூன்று படகு விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.