சாவகச்சேரியில் நீர்ப்பம்பிகளை திருடிய இருவர் கைது

53 0

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பல்வேறு பகுதிகளில் களவாடப்பட்ட 4 நீர்ப்பம்பிகளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர்

பாடசாலை, ஆலயம்,வீடு என மூன்று இடங்களில் நீர்ப்பம்பிகள் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸார் இன்று காலை சரசாலை, மட்டுவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

பின்னர் முன்னெடுத்த விசாரணையில் சரசாலை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 நீர்ப்பம்பிகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்