இதுவரை யுத்தநிறுத்தம் குறித்து உடன்பாடு எதுவுமில்லை – ஈரானின் வெளிவிவகார அமைச்சர்

64 0

இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால் ஈரான் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளாது என தெரிவித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் செயத் அபாஸ் அராக்சி தற்போது வரை யுத்த நிறுத்தம் குறித்த உடன்பாடு எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் உள்ளுர் நேரப்படி நான்கு மணிக்குள் தாக்குதலை நிறுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆனால் அவர் குறிப்பிட்ட நேரம் கடந்துவிட்டது.

இஸ்ரேலே தாக்குதலை ஆரம்பித்தது ஈரான் இல்லை என்பதை ஈரான் மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுவரை யுத்த நிறுத்தம் தொடர்பிலோ மோதல் நிறுத்தம் தொடர்பிலோ எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை,என அவர் தெரிவித்துள்ளார்.