கம்பஹாவில் கோடாவுடன் ஒருவர் கைது!

66 0

கம்பஹாவில் மாகெவிட்ட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் ஜா – எல, ஏகல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 1079 லீற்றர் (6 பீப்பாய்கள்) சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோடா கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.