கை, கால்கள் கட்டப்பட்டு வீட்டுப் பராமரிப்பாளர் கொலை ; வென்னப்புவையில் சம்பவம்!

68 0

புத்தளம் – வென்னப்புவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உல்ஹிட்டியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பராமரிப்பாளர் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்படுள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைசெய்யப்பட்டவர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்த வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் இத்தாலியில் வசிப்பதால் கொலைசெய்யப்பட்ட நபரே வீட்டை பராமரித்து வந்துள்ளார்.

இத்தாலியில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் உறவினர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (13) ,ந்த வீட்டிற்குச் சென்று பார்த்த போது பராமரிப்பாளர் சடலமாக கிடப்பதை கண்டுள்ள நிலையில் உடனடியாக பொலிஸாருக“கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வீட்டில் இருந்த வேன் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.