வற்றாப்பளைக்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் பலி

8 0

முல்லைத்தீவு – வற்றாப்பளை ஆலயத்தின்  வருடாந்த உற்சவத்திற்கு சென்று செவ்வாய்க்கிழமை (10) திரும்பிய இளைஞன் விபத்தில் பலியாகியுள்ளார்.

உந்துருளியில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலினுள் வீழ்ந்து பலியாகியுள்ளார்.

இந்த விபத்து நித்திரை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொது மக்கள் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.