மாரவில பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

97 0

மாரவில, கட்டுனேரிய புனித அந்தோணி மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி  ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவராவார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.