தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமாகி நடைபெற்று.
தமிழீழ விடுதலைக்காக இறுதி மூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையில், வீரஞ்செறிந்த தமிழீழ விடுதலைவரலாற்றில் இவர்களது வீரவரலாறும் பதியம்பெற்று, எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இம்மாவீரர்களின் இலட்சியத்தை நாமும் சுமந்து தமிழீழம் விடுதலையடையும் வரை தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியுடன் தாயகம் நோக்கி பயணிப்போம்.
உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களின் பெயர் விபரம்.
01. வீரவேங்கை ஆனந்தி – அருண்மொழி
02 – வீரவேங்கை கோபி
03 – வீரவேங்கை முத்தப்பன்
04 – வீரவேங்கை ஆண்டாள்
05 – வீரவேங்கை அகழிசை
06 – வீரவேங்கை பேரின்பன்
07 – வீரவேங்கை பிரதீப்
08 -வீரவேங்கை சீத்தா
09- வீரவேங்கை மதுவிழி
10 – வீரவேங்கை கோமதி – நிதர்சனா
11 – வீரவேங்கை அருளினி
12 – வீரவேங்கை இளையவன்
13 – வீரவேங்கை புனிதா
14 – காவல்துறை மாவீரர் அம்பிகைபாலன்
15 – வீரவேங்கை சுபேசினி
16 – வீரவேங்கை காதாம்பரி
17 – வீரவேங்கை காந்தன்
18 – வீரவேங்கை சந்திரன்
19 – வீரவேங்கை இரும்பொறை –










































































































































































































































































