மொனராகலை மாவட்டத்தில் கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோதமிகம பகுதியில் துப்பாக்கி மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை (30) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கதிர்காமம் பகுதியில் வசிக்கும் 44 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ 60 கிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் உள்நாட்டு துப்பாக்கி என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

