யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வந்த கலாநிதி சுதர்சினி உபேந்திரன் சனிக்கிழமை (31) நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில், பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்த சுற்றறிக்கைக்கு அமைய, திறமை மற்றும் தகைமையின் அடிப்படையில் கலாநிதி சுதர்சினி உபேந்திரன் வழங்கிய விண்ணப்பத்தின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அவற்றை அண்மைய முறையில் பரிசீலித்த பேரவை, அவரை பௌதிகவியல் துறையின் பேராசிரியராக நியமிப்பதற்கு ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது.

