சம்பூரில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!

74 0

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் பகுதியிலுள்ள கணேசபுரம் பிரதான வீதியில் காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மூதூர் – கட்டைபறிச்சான் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த முதியவர், தனது வயலுக்கு குருவிக் காவலுக்குச் சென்றபோது கணேசபுரம் வீதியில் வைத்து காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.