வெளிநாட்டுத் தூதுவர்களுடன முக்கிய சந்திப்பு
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் தூதுவர்களுடன் சந்திப்பு.
இன்று பிற்பகல் 1.15 மணியளவில் அமெரிக்கத் தூதுவருடன் அமெரிக்கத் தூதரகத்திலும் பிற்பகல் 3.00 மணியளவில் சுவிஸ் தூதுவருடன் சுவிஸ் தூதரகத்திலும் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன்
உதயன் பத்திரிகை உரிமையாளர் ஈ சரவணபவான்
சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன்
ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்று காலை 9.30 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினருடன் சந்திப்பு இடம்பெற்றது. அச்சந்திப்பில்
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன்
உதயன் பத்திரிகை உரிமையாளர் ஈ சரவணபவான்
சிரேஸ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன்
அகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.



