தேர்தலுக்கு பின் தொங்கு நிலையில் பிரதேச சபைகள்!-மக்கள் கருத்துக்களை பெற்று தீர்மானம் எடுப்போம்!

232 0

பிரதேச சபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அனைத்து சபைகளிலும் தொங்கு நிலை காணப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 

தம்பலகாமம் பகுதியில் நேற்று (17) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும், “பிரதேச சபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அனைத்து சபைகளிலும் தொங்கு நிலை காணப்படுகின்றது.

இதற்காக எங்களை பலர் நாடுகின்றனர். இது தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்று தீர்மானம் எடுப்போம்” என குறிப்பிட்டார்.