‘ஹரக் கட்டா’வின் சர்ச்சைக்குரிய கருத்து: பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

84 0
கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் “ஹரக் கட்டா” என்றும் அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

“ஹரக் கட்டா” என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நதுன் சிந்தக விக்ரமரத்ன, புதன்கிழமை (14) வழக்கு ஒன்றிற்காக கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோதும், நீதிமன்ற வளாகத்திலிருந்து திரும்ப அழைத்துச் செல்லப்பட்டபோதும், டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் குறித்து ஊடகங்களுக்கு இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.