வேலணை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி வந்த பஸ், மோட்டார் சைக்கிளில் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட போது, இடம் தரவில்லை என, மோட்டார் சைக்கிளில் வந்த மூவரும் பஸ் சாரதியுடன் முரண்பட்ட நிலையில், பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு, தப்பி சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் பஸ்ஸிலிருந்த இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

