களுத்துறை மாவட்டம் அளுத்கமை – மத்துகம வீதியில் தன்வத்தகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அளுத்கமை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சீனவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.