இவ் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழப்பு

16 0

நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கவலை தெரிவித்துள்ளதோடு, இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலினால் 7 பேர் உயிரிழந்ததாகவும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோய் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும், பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொடர்ச்சியாக டெங்கு நோயினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக டெங்கு அபாயம் அதிகம் ஏற்பட்டுள்ள இடங்களில் நுளம்பு இனப்பெருக்கமடையும் சூழலை அகற்றுதல், விழிப்புணர்வு மற்றும் நோய் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை முன்னெடுக்க தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தீர்மானித்துள்ளது.