தெற்கு அதிவேக வீதியில் வேன் – பாரவூர்தி விபத்து ; 12 பேர் காயம்

131 0
தெற்கு அதிவேக வீதியில் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில், மாத்தறை -அக்குரஸ்ஸ பிரதான வீதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாத்தறையைச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மாலிம்படை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.