அடையாளம் தெரியாத அந்த விமானம்பட்டிண்டாவில் உள்ள பிசியானா விமானப்படை நிலையத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்திற்கு அருகிலுள்ள வயல்களில் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விரைவில் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விபத்து குறித்து அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. விபத்து மற்றும் வெடிவிபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
சம்பவம் குறித்து பஞ்சாப் போலீஸாருக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பிறகு தீயணைப்பு படை வரவழைக்கப்பட்டது. இராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சூரிய உதயத்திற்கு முன்பு சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். இராணுவம் அந்த பகுதியை சுற்றி வளைத்ததுஇ மேலும் விமானப்படை ஒரு கூடாரத்தை அமைத்தது. விமானப்படை அதிகாரிகள் விரைவாக விமானத்தின் சிதைவுகளை சேகரிக்கத் தொடங்கினர்
கிராம மக்கள் உயிரிழந்த ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த கோவிந்த் என்று அடையாளம் காட்டினர்இ மேலும் அவர் வீடியோ பதிவு செய்ய முயன்றபோது இறந்ததாகக் கூறினர். விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல முயன்றபோது மேலும் ஒன்பது பொதுமக்கள் காயமடைந்தனர். அவர்கள் பட்டிண்டாவின் கோனியானா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
“கோவிந்த் கோதுமை அறுவடைக்காக இங்கு வந்து விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார். அவர் சம்பவ இடத்திற்கு முதலில் சென்றவர்களில் ஒருவர். அவர் விபத்தை வீடியோ பதிவு செய்யத் தொடங்கினார் ஆனால் அதற்கு மிக அருகில் சென்றுவிட்டார். திடீரென்றுஎரிந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது இதில் கோவிந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்” என்று பெயர் வெளியிட விரும்பாத கிராமவாசி ஒருவர் கூறினார்.
பொழுது விடிந்ததும் மேலும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வரத் தொடங்கினர் மேலும் அவர்களை வெடிவிபத்து நடந்த இடத்திலிருந்து விலக்கி வைப்பதற்காக காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டனர்

