உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
நானாட்டான் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,518 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) – 3,006 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,856 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
சுயாதீனக் குழு (IND1) – 1,380 வாக்குகள் – 2 உறுப்பினர்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1,314 வாக்குகள் – 2 உறுப்பினர்

