மட்டக்களப்பிற்கு கடும் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டன

96 0
மட்டக்களப்பு  மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பிரதான வாக்கெண்ணும் நிலையத்திற்கு  ஞாயிற்றுக்கிழமை (04)  எடுத்து வரப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 சபைகளுக்கான இடம்பெற உள்ளூராட்சி தேர்தலில் இம்முறை 447 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதேவேள, பிரதான தேர்தல் மத்திய நிலையமான மட்டக்களப்பு இந்து கல்லூரி வளாகத்தில்  தேர்தல் கடமைகளுக்கான அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தேர்தல் கடமைகளுக்காக வரும் ஊழியர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் மின்சார இணைப்புகள் போக்குவரத்து ஏற்பாடுகள் என்பன  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.