அன்னை பூபதி அவர்களின் 37 வது நினைவு நாளும் மற்றும் நாட்டுப்பற்றளார்கள் நினைவுநாளும் யேர்மனி போகும்.

258 0

அன்னை பூபதி அவர்களின் 37 வது நினைவு நாளும் மற்றும் நாட்டுப்பற்றளார்கள் நினைவுநாளும் யேர்மனி போகும் நகரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. பொதுச்சுடரினை தழிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இராட்டிங்கன் நகரச் செயற்பட்டாளர் திரு. அப்புத்துரை திருச்செல்வம் அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழத் தேசியக்கொடியை தழிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மத்தியமாநிலம் 2 இன் துணைப்பொறுப்பாளர் திரு. பொன்னம்பலம் கிருபாமூர்த்தி ஏற்றிவைத்தார். அன்னை பூபதி அவர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடர் யேர்மனி தமிழ்ப்பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான திருமதி. கிருபாரதி சிவராம் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.

நாட்டுப்பற்றாளர்களின் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை தழிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீர்ர் பணிமனைச் செயற்பாட்டாளர் திருமதி. றொயின் றீமதி லோகேஸ்வரன் ஏற்றிவைத்தார்.அன்னை பூபதி அவர்களின் திருவுருவப் படத்திற்கான மலர்மாலையை தழிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் போகும் நகரக் கோட்டப்பொறுப்பாளர் திரு. நடராஜா வரதன் அணிவித்தார்.நாட்டுப்பற்றாளர்களின் பொதுப்பத்திற்கான மலர்மாலை தழிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளரும் நாட்டுப்பற்றாளர் திருமதி. ஜெயந்தி கீதபொன்கலன் அவர்களின் துணைவருமான திரு. பீற்றர் கீதபொன்கலன் அணிவித்தார்.

அத்துடன் அன்னைபூபதி அவர்களின் நினைவாக நடைபெற்ற கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள் தமிழர்ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் சிறிரவிந்திரநாதனால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அன்னை பூபதித்தாயின் ஈகத்தையும் நாட்டுப் பற்றாளர்கள், மாமனிதர்களின் சிறப்புக்களையும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றியும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியக்கிளையின் அரசியற் துறைப் பொறுப்பாளர் திரு. திருநிலவன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற எழுச்சிப் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.