இறுதிச் சடங்கு நிகழ்வில் தகராறு ; ஒருவர் கொலை ; சிகிரியாவில் சம்பவம்

118 0

மாத்தளை – சிகிரியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயகம, கிம்பிஸ்ஸ பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வு ஒன்றில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிகிரியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைசெய்யப்பட்டர் ஹேன்வலயகம, கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.

கொலைசெய்யப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே சிறிது காலமாக நிலவிய தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை  சிகிரியா பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.