இதன்போது இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகைக்கும் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் உரையாடல் இடம்பெற்றது.
கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்க்கு எனது இரங்கலைத் தெரிவித்ததில் நான் பெருமை கொள்கிறேன். மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இரக்கம், பணிவு மற்றும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியன உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஆழமாகப் பாதித்தன என நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.


