கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மரணம்

86 0

கிண்ணியா குறிஞ்சாக்கேணி ஆற்றில், குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி 1 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பத்து வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

நேற்று மாலை 5. 15 மணியளவில் குறிஞ்சாக்கேணி ஆற்றில் 3 சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்ததாகவும், அந்த நேரம் அவர்கள் மூவரும், நீரோட்டத்தில் சிக்குண்டபோது, ஒருவர் காணாமல் போனதாகவும், ஏனைய இரு சிறுவர்களும் தப்பித்துக் கரையை அடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.