பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று வியாழக்கிழமை (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்துக்குச் சென்றார்.
தூதரகத்துக்குச் சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகை (Archbishop Brian N. Udaigwe) வரவேற்றார்.
பின்னர், பேராயருடன் சிறிது நேரம் உரையாடிய ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் பரிசுத்த பாப்பரசருக்கான தனது இரங்கல் குறிப்பினை பதிவு செய்தார்.
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்காக உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.




