உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” என பீஹாரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
பயங்கரவாத தாக்குதலால் இந்தியா துவண்டு போகாது. அவர்கள் கனவிலும் நினைத்திராத தண்டனை கொடுக்கப்படும். காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்து வேட்டையாடுவோம்.
இன்று பீஹார் மண்ணில் இருந்து இந்த உலகத்துக்கு சொல்கிறேன். பயங்கரவாதிகள் மண்ணோடு மண்ணாகும் நேரம் வந்துவிட்டது. பயங்கரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம்
பயங்கரவாத தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் சோகத்துடனும், வலியுடனும் உள்ளார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். பயங்கரவாதிகள் ஒவ்வொருவரையும், அவர்களுக்கு உதவியவர்களையும் இந்தியா கண்டறியும்; அவர்களது செயலுக்கு உரிய தண்டனை வழங்கியே தீரும்.

