சந்தேகநபர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்.
குறித்த சந்தேகநபர் 11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கடந்த 12 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் பின்னர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு, மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போதே, ஆயுதங்கள் மறைவாக வைக்கப்பட்டிருந்த இடம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அத்துருகிரிய பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

