கம்பஹா நகர பேருந்து நிலையத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (15) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பொலிஸாரின் முதல்கட்ட தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் ஓடிக்கொண்டிருந்த சிறிய லொறியொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தின்போது லொறியில் இருந்த இருவர் வாகனத்தை விட்டு வெளியேறி அருகிலிருந்த கடைக்குள் ஓடியதால் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட லொறி மட்டுமே சேதமாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

