மாத்தளையில் கஞ்சா செடிகள், கோடா, உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

107 0
மாத்தளை – கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெமெடில்ல பகுதியில் கஞ்சா செடிகள், கோடா மற்றும் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், வஹகோட்டை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து, 7 கஞ்சா செடிகள், 181 லீற்றர் கோடா மற்றும் உள்நாட்டுத் துப்பாக்கி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.