“நான் எப்போதும் விவசாயியின் மகனாக இருப்பேன்” – அண்ணாமலை

150 0

பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சரித்திரம் படைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக பாஜக வரவேற்கிறது. இந்த நடவடிக்கை ஏழை இஸ்லாமிய சொந்தங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். நெல்லையில் வக்பு வாரிய சொத்தை திமுகவைச் சேர்ந்தவர் அபகரித்ததை எதிர்த்துக் கேள்விகேட்ட ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டார். பல வக்பு சொத்துகளை திமுக அபகரித்து வைத்துள்ளது. இதுபோன்ற பல விவகாரங்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

மருதமலை கோயில் கும்பாபிஷேக விழாவை திமுக மாநாடா என்ற சந்தேகிக்கும் வகையில் நடத்தியுள்ளனர். அங்கு முருக பக்தர்களை அவமானப்படுத்தி உள்ளனர். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.