ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டடின் இயக்குநர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைது

100 0

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் என்ற விவரணச்சித்திரத்தின் இயக்குநரை hamdan ballal இஸ்ரேலிய இராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர்.

ஹம்டான் பலாலின்  வீட்டை முகக்கவசம் அணிந்த யூத குடியேற்றவாசிகள் தாக்கியதைதொடர்ந்தே இவரை இஸ்ரேலிய இராணுவத்தினர் கைதுசெய்துள்ளனா.

மேற்குகரையில் கிராமங்கள் அழிக்கப்படுவதை பதிவு செய்த இயக்குநர்களில் ஒருவரான ஹம்டான் பலாலை 15க்கும் மேற்பட்ட யூதகுடியேற்றவாசிகள் முகக்கவசம் அணிந்தவாறு  தாக்கினார்கள் என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த யூத அமெரிக்க செயற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெப்ரோனின் தென்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் பாலஸ்தீனியர்களை நோக்கி கற்களை வீசதொடங்கினார்கள்,ஹம்டானின் வீட்டிற்கு அருகிலிருந்து நீர்த்தொட்டியை சேதப்படுத்தினார்கள் ஜோசப் என்ற நபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏனையஇராணுவ சீருடை அணிந்த யூதகுடியேற்றவாசிகளுடன் அந்த பகுதிக்கு இஸ்ரேலிய இராணுவத்தினர் வந்தனர் அவர்கள் ஹம்டானை அவரது வீட்டிற்குள் துரத்தி பிடித்து படையினரிடம் ஒப்படைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்

யூதகுடியேற்றவாசிகள் அவரின்காரை சேதப்படுத்தினார்கள் அதன்டயர்களை சேதப்படுத்தினார்கள் எனரவிவ் என்பவர் கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பலால் இராணுவத்தினரால் iதுசெய்யப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.