இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார் என தெரிவித்துள்ளார்.
பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய நாடுகளிற்கு அளித்த வாக்குறுதியை வழங்குங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாணசபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் என தெரிவித்துள்ளார்.
பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையை இந்த விவகாரங்களிற்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை நான் எப்போதும் எதிர்த்து வந்துள்ளேன்.
நான் எப்போதும் அதனை எதிர்த்து வந்துள்ளேன்.
நான் என்ன தெரிவித்து வருகின்றேன் என்றால் சொன்னதை செய்யுங்கள். அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள் – இதனை செய்யக்கூடாது. செய்யவேண்டாம் என நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை.
இதன் காரணமாகவே நான் தேர்தல்களில் தோற்றேன்.
நான் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக குற்றம்சாட்டினார்கள்.அது முடிவடைந்ததும் ராஜபக்சாக்களிற்கு ஆதரவளித்ததாக குற்றம்சாட்டினார்கள்.
அதனை விடுவோம்
ஆனால் நான் மேற்குலகில் நான் சமீபத்தில் பார்த்தது என்னவென்றால் இரண்டு விதமான நிலைப்பாடுகள்.
உக்ரைன்தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகின்றனர்.
எனது தலைவர்கள் நண்பர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது சுதந்திரமான நீதியான தேர்தல்களை நடத்துவதற்கான முயற்சியின் போது அவர்கள் கொல்லப்பட்டனர்.
ஆனால் உக்ரைனிற்கு வழங்குகின்ற சாதக தன்மையை மேற்குலகம் எங்களிற்கு வழங்காது.
ஆனால் உக்ரைன் ஜனாதிபதிக்கு அனைத்தையும் மாற்றுவதற்கான அனுமதியை அவர்கள் வழங்குகின்றார்கள்.
இதன் காரணமாகவே ஜனாதிபதி டிரம்ப் ஜெலென்ஸ்கியை பார்த்து நீங்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவில்லை என்றார்.
அவர்களால் ஜனாதிபதி டிரம்பின் மீது பாயமுடியுமென்றால் எங்களின்நிலைமை என்ன?
ஆகவே எங்களால் என்ன செய்ய முடியுமென்றால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே.
அவர்களுடன் பேசுங்கள் மாகாணசபைகளிற்கு மேலதிக பொறுப்புளை வழங்குங்கள்.
குற்றவாளிகள் யார் என்றாலும் தண்டியுங்கள்நான் பல நடவடிக்கைகளை ஆரம்பித்தேன்.
ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரட்டை நிலைப்பாட்டை பின்பற்ற விரும்பினால் .இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அது அமைந்திருக்க கூடாது.
நான் எவருக்கும் எதிரானவன் அல்லமனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய கிளையின் செயற்பாடுகள் குறித்து விசாரணை இடம்பெற்றால் நாங்கள் தொடர்ந்தும் நீடிக்கலாம்.
நவிபிள்ளையுடன் செயற்படுவது சுலபமாகயிருந்தது அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார். அவர் எங்களது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார்.அவருடன் பேசமுடியும்.
ஆனால் தற்போதுள்ளவர்கள் எங்களை நோக்கி சத்தமிடுகின்றனர்.எங்களால் தான் அவர்கள் அங்கிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.
நாங்களே இரண்டாம் உலக யுத்தத்தில் போரிட்டோம் நாங்களே ஐரோப்பாவை விடுதலை செய்தோம்.
எத்தனை ஐரோப்பியர்கள் ஹிட்லருக்கு எதிராக போரிட்டார்கள். இரண்டரை மில்லியன் இந்தியர்கள் போரிட்டார்கள்.இலங்கையர்கள் போரிட்டார்கள்ஆபிரிக்கர்கள் போரிட்டனர்.
நாங்கள் போரிட்டு ஹிட்லரை தோற்கடித்திருக்காவிட்டால் உங்களால் மனித உரிமை சாசனம் ஒன்றை உருவாக்க முடியாமல் போயிருக்கும்.

