கடையின் சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை ; ஒருவர் பலி

55 0
அநுராதபுரம், மின்னேரியா, மினிஹிரிகம பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று கடை ஒன்றின் சுவரை இடித்து சேதப்படுத்தியதில் கடைக்குள் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மினிஹிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தன்று, காட்டு யானை ஒன்று குறித்த கடையின் சுவரை இடித்துள்ளது.

இதன்போது, கடையின் சுவர் இடிந்து அங்கு உறங்கிக்கொண்டிருந்த பெண்ணின் மீது விழுந்துள்ளது.

காயமடைந்த பெண் ஹிங்குரக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.