இன்று இடியுடன் கூடிய மழை

84 0

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

அத்துடன் மேல், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.