திருகோணமலைப் பொது நூலக கேட்போர்கூடத்தில் திருகோணமலை தமிழ்ச் சங்கத்திற்கான புதிய செயற்குழு சனிக்கிழமை (15) தெரிவு செய்யப்பட்டது.
சுமார் பத்து ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திருக்கோணமலைத் தமிழ்ச் சங்கம் கேணிப்பித்தன் (அருளானந்தம்) ஐயாவின் மூலம் மீள உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தலைவராக திருமலை நவம்(மேனாள் பள்ளி முதல்வர்), செயலாளராக சி. காண்டீபன் (பள்ளி ஆசிரியர்) பொருளாளராக மு.மு.மு. முகைஸ் (பள்ளி முதல்வர்) , தெரிவு செய்யப்பட்டனர்.
துணை தலைவராக கவிஞர் க. யோகானந்தம், துணை செயலாளராக கவிஞர் தி. பவித்திரன் , உறுப்பினர்களாக அதிபர் சுஜந்தினி யுவராஜா, ஆசிரியர் அ. ரவீந்திரன், எமுத்தாளர் கதிர், திருச்செல்வம், கவிஞர் எஸ். ஆர். தனபாலசிங்கம், கவிஞர் எஸ். சிவசங்கரன், ஊடகவியலாளர் அ. அச்சுதன், சமூக செயற்பாட்டாளர் T. கோபகன், ஆசிரியர் மர்ளியா சக்காப், நூலகர் ந. யோகேஸ்வரன், எமுத்தாளர் அருஷா ஜெயராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழ்ச்சங்கத்தின் இளைஞர் அணியும் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

