அன்றாடம் தனது சுய வேலைகளை தாமே செய்து கொண்டும் வாழ்ந்த இவர் தமது சமய விடயங்களுக்கு முன் உரிமை கொடுத்து, அதனை முறையாகப் பின்பற்றி வாழ்ந்த ஒருவராவார்.
மரணிப்பதற்கு சில நாட்கள் வரை அதாவது முதல் எட்டு நோன்புகள் வரை இவர் நோன்பு நோற்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
குறிப்பிடத்தக்க பாரிய வியாதிகள் எதுவும் இன்றி தனது புதல்வியின் உதவியுடன் வாழ்ந்து வந்த இவர் இறுதிநேரத்தில் மட்டுமே பலவீனமடைந்து காணப்பட்டார். இவர் இப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு அமைதியான சுபாவம் கொண்ட வர்த்தகர் ஆவார்.
இவர் நான்கு புதல்விகளதும், நான்கு புதல்வர்களதும் தந்தையாவார், அவர்களில் சிலர் மரணித்துள்ளனர். சிலர் வாழ்ந்துகொண்டுள்ளனர்.
இவரது ஜனாஸா வியாழக்கிழமை (13) யஹலதென்ன ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

