சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய சந்தேக நபர் கைது

86 0
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகைதீன் மாவத்தை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (13) இடம்பெற்றது.

குறித்த தேக்கு மரப்பலகைகளை கடத்துவதற்கு பயன்படுத்திய வாகனத்தையும் சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்மாந்துறை 03 பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.