நெதர்லாந் அல்மேரா மற்றும் பிறேடா நகரிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள்
..!

408 0

நெதர்லாந் அல்மேரா நகரில் அகிம்சையின் அன்னையான அன்னை பூபதியின் 29 ம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர்களுக்கான
வணக்க நிகழ்வும் கடந்த சனிக்கிழமை {29-04-2017} அன்று இடம்பெற்றது 
இவ் நிகழ்வில் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் வீரவணக்க நிகழ்வும் மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை [30-04-2017]அன்று பிறேடா நகரில்,ஆனந்தபுரத்தில் ஆகுதியான வீரமறவர்களுக்கான
வீரவணக்கநிகழ்வும் நெதர்லாந்து வாழத்தமிழ்மக்களால் நினைவு கூறப்பட்டது .

இவ் நிகழ்வின் ஆரம்பநிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு வீரவணக்கநிகழ்வு ஆரம்பமானது தொடர்ந்து தேசியக்கொடி மற்றும் சுடர்வணக்கம் , மலர்வணக்கம் , அகவணக்கத்தினை தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சி கனங்களும் , மற்றும் சிறப்புரைகளும் இடம்பெற்றது இவ் நிகழ்வின் இறுதியில் தமிழரின் தாரக மந்திரமான நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.