இரத்தினபுரி – பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லேபொல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (12) மாலை பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாங்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 25 கிராம் 120 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக வசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.