சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டு

74 0

345,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு சென்ற இரண்டு பயணிகள், விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவால் ஞாயிற்றுகிழமை (09) கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் கண்டி, குண்டசாலையைச் சேர்ந்த 32 வயதுடைய தனியார் துறை ஊழியர் ஆவார். அவர் சனிக்கி​ழமை (08) அன்று அதிகாலை 5.00 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

மற்றொரு நபர் கண்டியைச் சேர்ந்த 50 வயதுடைய உடற்கட்டமைப்பு பயிற்றுவிப்பாளர் ஆவார், அவர் ஞாயிற்றுகிழமை (09) அன்று அதிகாலை 1.10 மணிக்கு துபாயிலிருந்து ஃப்ளைடுபாய் FZ-569 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.இருவரும் தங்கள் பொருட்களில்  மறைத்து வைத்து வெளிநாட்டுத் தயாரிப்புப் பொருட்களைக் கடத்தினர்.

23,000 “மான்செஸ்டர்” மற்றும் “பிளாட்டினம்” சிகரெட்டுகள் அடங்கிய 115 சிகரெட் அட்டைப்பெட்டிகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்இருவரும் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு,எதிர்வரும் (12) அன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.