திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகளை இந்திய அரசு செய்துதர வேண்டும் – குகதாசன் கோரிக்கை

108 0
திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகளை இந்திய அரசு செய்து தர வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தென்கயிலை என போற்றப்படுவதும் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றானதும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதுமான திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகள் நீண்ட காலமாக முடிவுறாமல் நிலுவையில் உள்ளன.

இந்திய அரசானது, மற்றுமொரு பாடல் பெற்ற தலமான திருக்கேதீச்சரர் கோவில் திருப்பணிகளை செய்து முடித்தது போல திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகளையும் செய்துதர வேண்டும் என வேண்டுகிறேன்.

அந்த வகையில் இராசகோபுரம் அமைத்தல், மணிமண்டபம் அமைத்தல், சக்திபீடம் அமைத்தல் ,வெளி வீதி அமைத்தல், பஞ்சலிங்கங்களை திருநிலைப்படுத்தல், முதலிய திருப்பணிகளை விரைந்து செய்து முடிக்க ஆக்கமும் ஊக்கம் அளிக்க வேண்டும் என இந்திய அரசை வினையமாக வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.