இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பாரியளவான கடல் அட்டைகள்

94 0

தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த சுமாா் 800 கிலோ கிராம் கடல் அட்டைகளை இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் புதுக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஜோதி நகா் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனா். அதில் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் மூட்டைகளில் கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

அந்த வாகனத்தில் இருந்த சுமாா் 800 கிலோ கிராம் கடல் அட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடா்பாக தெரசாபுரத்தை 38 வயதானவரையும், கயத்தாறையை சோ்ந்த 47 வயதானவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இவை இலங்கைக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை