இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

89 0

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது