கொழும்பு – முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முவதொர உயன பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று புதன்கிழமை (05) இரவு முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகத்துவாரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

