கொழும்பு – கண்டி பிரதான வீதியில் அளுத்கம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) இரவு இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெம்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்த வயோதிபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் யக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய வயோதிபர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெம்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

