சர்ச்சைக்குரிய இலங்கை போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் வாக்குமூலம் அளித்த பிறகு, ஜெரோம் பெர்னாண்டோ டிசம்பர் 2023 இல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார்.
மே 2023 இல், சபைக்கு முன்னால் புத்தர், இஸ்லாம் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் இந்த போதகர், இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டார்.
அவரது கருத்துகளின் காணொளி காட்சிகள் நாட்டில் உள்ள புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து, ஜெரோம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய அறிக்கைக்கு பல மன்னிப்புகளை வெளியிட்டார்.
சம்பவம் நடந்ததிலிருந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் வெளிநாட்டில் இருந்த பிறகு அவர் இலங்கைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

