கண்டி மாவட்டம் வத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வத்தேகெதர பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் கவிழ்ந்து அருகிலிருந்த சுவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கட்டுகஸ்தோட்டை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சிறுவனும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வத்தேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

