சட்டவிரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச் சென்ற மூவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது

92 0

சட்டவிரோதமான முறையில் போலியான அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மாடுகளை ஏற்றிச் சென்ற மூவரை இன்று திங்கட்கிழமை (03) காலை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

ஏறாவூரிலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு போலியான அனுமதி பத்திரத்தைப் பயன்படுத்தி 9 மாடுகளை சிறிய வாகனம் ஒன்றில் அடைத்து வைத்த நிலையில் ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகனத்திலிருந்து 9 மாடுகள் உடல் பலவீனமான முறையில் மீட்கப்பட்டுள்ளன.

சில மாடுகளில் காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிருகவதை சட்டத்தின் கீழ் குறித்த சந்தேகநபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.