எத்திமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகல பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (8) கைது செய்யப்பட்டுள்ளதாக எத்திமலை பொலிஸார் தெரிவித்தனர்.
எத்திமலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எத்திமலை பகுதியில் வசிக்கும் 42 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

